Saturday, 12 August 2017

கடமையும் உரிமையும்..!


அன்றில் பறவை..!


"அன்றில்" என்ற சொல்லுக்கு ஒன்றை விட்டு மற்றொன்று பிரிந்திராது என்று பொருள்..
அன்றி + இல் = அன்றில்..
இந்த இயல்பு கருதியே நம் முன்னோர்கள் ஒரு பறவைக்கு "அன்றில்" என்று பெயர் வைத்தனர்.. ஆண் அன்றிலும், பெண் அன்றிலும் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்திராதாம்.. பிரிந்தும் வாழாதாம்..
ஒரு வேளை பிரிய நேரிட்டால், உடனே கூவி அழைக்குமாம்.. இணைந்து வாழும் அன்றில் பறவைகளில் ஒன்று இறக்க நேர்ந்தால், மற்றொன்று தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொள்ளுமாம்.. தூங்கும்போது கூட ஒன்றன் மீது மற்றொன்றின் பார்வை வைத்தே உறங்குமாம்.. இதனை நளவெண்பாவின்
"ஒரு கண் ஆர்வத்தால் - அன்றில்
இன்றுணை மேல் வைத்துறங்கும்"
எனும் வரிகளால் அறியலாம்..
அன்றில் பறவைக்கு மற்றொரு பெயர் மகன்றில்.. இது நெய்தல் நிலத்துப் பறவை.. இப்பறவை பனை மரத்தில் கூடு கட்டி வாழ்வதால் "பனை வாழ் அன்றில்" என்று இலக்கியங்களில் கூறப்படுகிறது.. இது நீண்ட அலகினையும், செந்நிறமான தலையையும் கொண்டது..
"ஏங்குவயிர் இசைய பெருவாய் அன்றில்" - குறிஞ்சிப்பாட்டு..
"எலிதகைந் தன்ன செந்தலை அன்றில்"- குறுந்தொகை..
இலக்கியத்தில் பறந்து வரும் அன்றில் பறவை, இன்று மறைந்து போன பறவைகளில் ஒன்றாகி விட்டது..!
அழிந்து போன
அன்றில் பறவையோடு
அன்றிப் போனதோ
அது மாதிரியான
அழகான
அன்பும்
அரவணைப்பும்..?!
#பின்குறிப்பு : இந்த இலக்கியக் குறிப்புகள், இணையத்தேடலில் கிடைத்தவை..!

Saturday, 27 May 2017

மெழுகு பொம்மை..!


காயம் படப்போகிறது..!


அழகிய முரண்..!


தங்கச் சிலையே..!


சுதந்திர பறவை..!


விலகிக் கொண்டது காதல்..!


நினைவிருக்கிறதா..?


மனிதனும் பூச்சியும்..!


உன் ஊர் செல்லும் போது..!


காதல் தேனீ..!