"அன்றில்" என்ற சொல்லுக்கு ஒன்றை விட்டு மற்றொன்று பிரிந்திராது என்று பொருள்..
அன்றி + இல் = அன்றில்..
இந்த இயல்பு கருதியே நம் முன்னோர்கள் ஒரு பறவைக்கு "அன்றில்" என்று பெயர் வைத்தனர்.. ஆண் அன்றிலும், பெண் அன்றிலும் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்திராதாம்.. பிரிந்தும் வாழாதாம்..
ஒரு வேளை பிரிய நேரிட்டால், உடனே கூவி அழைக்குமாம்.. இணைந்து வாழும் அன்றில் பறவைகளில் ஒன்று இறக்க நேர்ந்தால், மற்றொன்று தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொள்ளுமாம்.. தூங்கும்போது கூட ஒன்றன் மீது மற்றொன்றின் பார்வை வைத்தே உறங்குமாம்.. இதனை நளவெண்பாவின்
"ஒரு கண் ஆர்வத்தால் - அன்றில்
இன்றுணை மேல் வைத்துறங்கும்"
இன்றுணை மேல் வைத்துறங்கும்"
எனும் வரிகளால் அறியலாம்..
அன்றில் பறவைக்கு மற்றொரு பெயர் மகன்றில்.. இது நெய்தல் நிலத்துப் பறவை.. இப்பறவை பனை மரத்தில் கூடு கட்டி வாழ்வதால் "பனை வாழ் அன்றில்" என்று இலக்கியங்களில் கூறப்படுகிறது.. இது நீண்ட அலகினையும், செந்நிறமான தலையையும் கொண்டது..
"ஏங்குவயிர் இசைய பெருவாய் அன்றில்" - குறிஞ்சிப்பாட்டு..
"எலிதகைந் தன்ன செந்தலை அன்றில்"- குறுந்தொகை..
இலக்கியத்தில் பறந்து வரும் அன்றில் பறவை, இன்று மறைந்து போன பறவைகளில் ஒன்றாகி விட்டது..!
அழிந்து போன
அன்றில் பறவையோடு
அன்றிப் போனதோ
அது மாதிரியான
அழகான
அன்பும்
அரவணைப்பும்..?!
அன்றில் பறவையோடு
அன்றிப் போனதோ
அது மாதிரியான
அழகான
அன்பும்
அரவணைப்பும்..?!
#பின்குறிப்பு : இந்த இலக்கியக் குறிப்புகள், இணையத்தேடலில் கிடைத்தவை..!
அன்றில் அழிந்து விட வில்லை.. இப்போதும் என்னை காலையில் தனது கரகரப்பான குரலால் எழுப்புவது அன்றில் பறவை ஜோடி தான்.. எனது வீட்டுக்கு அடுத்த வீட்டின் தென்னை மரத்தில் கூடுகட்டி சில மாதங்களாக கூடி வாழ்கிறது.. இது என்ன பறவை என பலரிடம் கேட்டு பலருக்கும் தெரியவில்லை.. பின்னர் ஒருவர் தான் இது அன்றில் பரவை என இனம் காட்டினார்.. அதன் பின்னரே அதை பற்றிய தேடலில் அதை பற்றி அறிய முடிந்தது.. எனது திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் ஆகும்.. எனவே அழிந்து விட வில்லை அன்றில்.. அதிக அளவில் நெல்லைக்கு அருகில் உள்ள கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தில் காணலாம்..
ReplyDeleteஅருமை.. பெயர் தெரியாத பறவைகளும், விலங்குகளும், பூச்சிகளும், தாவரங்களும் இருக்கத்தான் செய்கின்றன..
Deleteதகவலுக்கு நன்றி.. முடிந்தால் அப்பறவைகளை புகைப்படம் எடுத்து அனுப்பவும்..
Super Bro., Pls send pic of the Bird.,
Delete
ReplyDeleteSuper Bro., Pls send pic of the Bird.,
அன்றில் பறவை புகைபடம் கிடைத்தால் நலம்.
ReplyDelete9994768761