Wednesday, 8 February 2017
Saturday, 4 February 2017
யார் தமிழர்..!
தமிழ் பேசுவோரெல்லாம் தமிழரல்ல
தமிழுக்காக பேசுவோரே தமிழர்..
தமிழ் நாட்டில் வாழ்பவரெல்லாம் தமிழரல்ல
தமிழ்ப் பண்பாட்டில் வாழ்பவரே தமிழர்..
#ஜித்தன்
உழவர்கள் தம் மாடுகளுக்கு
அன்பும் மரியாதையும் செலுத்தும்
மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!
தமிழுக்காக பேசுவோரே தமிழர்..
தமிழ் நாட்டில் வாழ்பவரெல்லாம் தமிழரல்ல
தமிழ்ப் பண்பாட்டில் வாழ்பவரே தமிழர்..
#ஜித்தன்
உழவர்கள் தம் மாடுகளுக்கு
அன்பும் மரியாதையும் செலுத்தும்
மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!
தமிழ்க் கல்வி முறை..!
"மானம் பெரிதென உயிர்விடுவான்;
மற்றவர்க் காகத் துயர்படுவான்..
தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு.."
#நாமக்கல்_கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
ப்பா.. படிக்கும் போதே உடம்பு சிலிர்க்குதே.. உணர்ச்சிமிக்க வரிகள்..
கல்வியை,
வியாபாரமாக பார்ப்பது
ஆங்கிலக் கல்வி முறை;
வாழ்வியலாகப் பார்ப்பது
தமிழ்க் கல்வி முறை..
அழகை அதிகமாய் பாடுது
ஆங்கில இலக்கியங்கள்;
அறத்தை அதிகமாய் பாடுது
தமிழ் இலக்கியங்கள்..!
#ஜித்தன்
பி.கு: நான் பன்மொழி அறிஞனில்லை.. என் அனுபவத்தில் உணர்ந்ததை ஒப்பிட்டு இதை எழுதினேன்.. மொழியறிஞர்களின் கருத்துக்களை வரவேற்கிறேன், தெரிந்துகொள்ளும் ஆவலோடு..
விழிப்புணர்வு..!
விளையாட்டின்
நுணுக்கங்கள் தெரிந்தபின்,
விரும்புவதில்லை யாரும்
வேடிக்கை மட்டுமே பார்க்க..
பிரச்சனைகளின்
ஆழங்கள் உணர்ந்தபின்,
ஆசைப்படுவதில்லை யாரும்
அமைதியாய் அமர்ந்திருக்க..
விழிப்புணர்வு தான்
விடுதலைக்கு முதல் வித்து,
விழித்துக் கொண்டால்
வெற்றி நம் பரம்பரை சொத்து..!
#ஜல்லிக்கட்டு #JusticeForJallikattu #AmendPCA
#வேண்டும் விழிப்புணர்வு
*விவசாயத்தில்
*விஞ்ஞானத்தில்
*வாழ்வியலில்
பொங்கல்..!
முதல் நாள் : பழையன கழிதல், புதியன புகுதல் - #போகி
இரண்டாம் நாள் : விவசாய கடவுளான, இயற்கைக்கு (சூரியன்) நன்றி - #பெரும்_பொங்கல்
மூன்றாம் நாள் : விவசாயத்திற்கு உதவிய கால்நடைகளுக்கு (மாடுகள்) நன்றி - #மாட்டுப்பொங்கல்
நான்காம் நாள் : ஆண்டு முழுவதும் நம்மோடு உழைத்த சுற்றத்தார், உறவினருக்கு நன்றி - #காணும்_பொங்கல்
அடடா.. என்ன ஒரு அழகாக கட்டமைக்கப்பட்ட திருவிழா, நம் பொங்கல்..!
உறவினர் மற்றும் நண்பர்களோடு மகிழ்ச்சியாக உறவாடிக் களிக்கும், கழிக்கும் #காணும்_பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!
பெருமையுடன் நன்றியுடனும்..
பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!
அன்று உணவே மருந்து
அதுவே தமிழர் மரபு..
இன்று மருந்தே உணவு
இது யார் செய்த தவறு..?
அடுத்த தலைமுறைகள்
நற்காற்றை சுவாசிக்கவும்
நல்லுணவை புசிக்கவும்
நோயின்றி நூறாண்டு வாழவும்
இயற்கை விவசாயத்தை காத்திடுவோம்..!
உழவர் தம் வாழ்வு சிறக்கவும்
தமிழர் நம் நெஞ்சம் நிமிரவும்
அன்புடன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
-ஜித்தன்
போகி திருநாள் வாழ்த்துக்கள்..!
ஊர்கூடி
கொண்டாட வேண்டிய
விழா நாட்களில்,
தெருவில்
போராட வைத்த
அரசியல்வாதிகளை,
தேர்தலில்
திண்டாட வைப்பதே
மக்களின் முதல் கடமை..!
#ஜித்தன்
கொண்டாட வேண்டிய
விழா நாட்களில்,
தெருவில்
போராட வைத்த
அரசியல்வாதிகளை,
தேர்தலில்
திண்டாட வைப்பதே
மக்களின் முதல் கடமை..!
#ஜித்தன்
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே”
- நன்னூல் நூற்பா (462)
நீதிக்கு எதிரான,
வேற்றுமைகளை எரித்து
ஒற்றுமையை தரிப்போம்..
வேற்றுமைகளை எரித்து
ஒற்றுமையை தரிப்போம்..
நட்புடன் இனிய போகி நல்வாழ்த்துக்கள்..!
Subscribe to:
Posts (Atom)