"மானம் பெரிதென உயிர்விடுவான்;
மற்றவர்க் காகத் துயர்படுவான்..
தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு.."
#நாமக்கல்_கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
ப்பா.. படிக்கும் போதே உடம்பு சிலிர்க்குதே.. உணர்ச்சிமிக்க வரிகள்..
கல்வியை,
வியாபாரமாக பார்ப்பது
ஆங்கிலக் கல்வி முறை;
வாழ்வியலாகப் பார்ப்பது
தமிழ்க் கல்வி முறை..
அழகை அதிகமாய் பாடுது
ஆங்கில இலக்கியங்கள்;
அறத்தை அதிகமாய் பாடுது
தமிழ் இலக்கியங்கள்..!
#ஜித்தன்
பி.கு: நான் பன்மொழி அறிஞனில்லை.. என் அனுபவத்தில் உணர்ந்ததை ஒப்பிட்டு இதை எழுதினேன்.. மொழியறிஞர்களின் கருத்துக்களை வரவேற்கிறேன், தெரிந்துகொள்ளும் ஆவலோடு..
No comments:
Post a Comment