அன்று உணவே மருந்து
அதுவே தமிழர் மரபு..
இன்று மருந்தே உணவு
இது யார் செய்த தவறு..?
அடுத்த தலைமுறைகள்
நற்காற்றை சுவாசிக்கவும்
நல்லுணவை புசிக்கவும்
நோயின்றி நூறாண்டு வாழவும்
இயற்கை விவசாயத்தை காத்திடுவோம்..!
உழவர் தம் வாழ்வு சிறக்கவும்
தமிழர் நம் நெஞ்சம் நிமிரவும்
அன்புடன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
-ஜித்தன்
No comments:
Post a Comment