Saturday, 26 November 2016

நீல நிறம்..!


கடலின் நீலத்தை 
அள்ளி வானில் 
பூசுகிறதா; அல்லது 
வானின் நீலத்தை
கடலில் அலசுகிறதா,
அந்த வெண்ணிலவு..!?

விதி மீறல்..!


வண்ணத்துப்பூச்சிகளின் 
விதி மீறல்..
ஒரு பூவை இத்தனை 
பூச்சிகளா 
மொய்த்துக்கொள்வது..?

கவிதை அறுவடை..!



வினை விதைத்தவன்
வினை அறுப்பான்;
திணை விதைத்தவன்
திணை அறுப்பான்..

நான் மட்டும்,
காதலை விதைத்துவிட்டு
கவிதைகளை அறுவடை
செய்துகொண்டிருக்கிறேன்..

நினைவுகளை உரமாக்கி
பாய்ச்சிய கண்ணீருக்கு,
என் மன வயலில்
அமோக விளைச்சல்..!

விவசாயி தான் கடவுள்..!


படம் "கத்தி" சொன்னாலும் 
பாடம் புத்தி சொன்னாலும்
ஏற்கும் சக்தியில்லை நமக்கு, 
விவசாயி தான் 
கடவுளென்று..!

விடுதலை விடியல்..!


இரவு முழுவதும் 
உறக்கம் தியாகித்து 
நடத்தப்படும் 
மனப் போராட்டங்களுக்கு, 
விடுதலை கிடைக்கிறது;
மறுநாள் காலையிலிருந்து
அன்றிரவு வரை..!

சிவந்த கண்..!



என்னைப் போலவே
நேற்று சரியாய்
உறங்கவில்லையோ
அந்த விண்ணும்..?

என்னைப் போலவே
இன்று சிவப்பாய்
திறந்திருக்கிறதே
அதன் கண்ணும்..!

நோயல்ல வரம்..!


மறதி என்பது
நோயல்ல; வரம்..
அது மட்டும் 
இல்லையென்றால்,
உன் நினைவுகளில்
மூழ்கியே
பித்துப் பிடித்தோ,
செத்து மடிந்தோ
போயிருப்பேன்
இந்நேரம்..!

முள்ளில்லா ரோஜாப்பூ..!


கள்ளம் இல்லா 
உள்ளம் கொண்ட,
அவளொரு 
முள்ளே இல்லா 
ரோஜாப்பூ..!

முதல் அங்கீகாரம்..!

முதல் அங்கீகாரம்.. அளவற்ற மகிழ்ச்சி..!
"நிலாமுற்றம் குழுமம்" நடத்திய படத்திற்கேற்ற குறும்பா போட்டியில் கிடைத்த அங்கீகாரம். தேர்வு குழுவினருக்கும், சக நண்பர்களுக்கும் நட்புமிக்க நன்றிகள்..!
குறும்பா, படம் + சான்றிதழை, உங்களிடம் இங்கே பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. 
..........................................................



இரவும் பகலும்
சங்கமித்திட,
விழிகள் சந்திக்கவே
சங்கடப்பட,
இதழ்கள் மௌனிக்கவே
விருப்பப்பட,
இதயங்கள் இணைந்திருக்கவே
ஏக்கப்பட,
நிமிடங்கள் நகர்ந்திடவே
சிரமப்பட,
நினைவெல்லாம் மறந்து
உணர்வெல்லாம் துறந்திட,
தொழும் வெவ்வேறு
தெய்வங்களே காரணம்
நாமின்று பிரிந்திட..!

அலாரம்..!


ஆழ்ந்த
உறக்கத்திலிருந்து
"அலற"டித்து
எழ வைப்பதால் தான்
உனக்கு பெயர் 
அலாரம்-மா..?
இப்படி பண்றீங்களே மா..!

கதை + விதை + வித்தை = கவிதை


என் 
கவிதைகளுக்கு
விதைகளே, 
உன் விழிகள்
பேசும்
கதைகளும்,
உன் இதழ்கள்
செய்யும்
வித்தைகளும் தான்..!

விதிவிலக்கு..!


விதிவிலக்கு 
என்பது 
சீனத் தயாரிப்புக்கு 
மட்டும் 
விதிவிலக்கா என்ன..? 

காதலில் பிழைகள்..!


அருகினில் 
சிறிதாகவும், 
தொலைவினில் 
பெரிதாகவும் 
தெரிகிறது, 
காதலில் பிழைகள்..!

இன்னமும் இருக்கிறேன்..!


இன்னும் உனக்கு 
என்னை 
நினைவிருக்கிறதா 
தெரியவில்லை..
ஆனால், 
உன் நினைவுகளால்
மட்டுமே நான்
இன்னமும் இருக்கிறேன்..!
(உயிரோடு)

மெய் அன்பு..!


மௌனம் மட்டுமே 
மொழியான பின்,
மெய் அன்பு
மெல்லப் புரிகிறது..!

Thursday, 17 November 2016

முக்கோணக் காதல்..! 2


பூமியே
தன்னைச் சுற்றும்
நிலாவை 
விட்டுவிட்டு,
சூரியனைத் தானே
சுற்றுகிறது..!
.................................
ஜித்தன் (எ)
தனிமை காதலன்

குரலிசையும் குழலிசையும்..!


நில்லடி பெண்ணே
ஒரு நிமிடம்,
எதற்கும்
சொல்லிவிடுகிறேன்
அவசர ஊர்தியிடம்..
உன் குரலிசைக்கே
உறைந்திடுமே இதயம்
சில நாழிகை,
நீ குழலிசைத்தால்
என்னாகிடுமோ
பிறகென் நிலைமை..?!
.................................
ஜித்தன் (எ)
தனிமை காதலன்

Tuesday, 15 November 2016

வெட்கம்..!


#1
உன் வெட்கம்
கண்ட பிறகே
புரிந்துகொண்டேன்;
வெட்கத்திற்கே 
வெட்கம் வந்தால்,
இப்படித் தான்
இருக்குமென்று..!

#2
பொதுவாகவே
பெண்கள்
வெட்கப்பட்டால்,
அழகாயிருக்கும்..
ஒருவேளை,
அந்த வெட்கமே
வெட்கப்பட்டால்
இப்படி இருக்குமோ..!
.................................
ஜித்தன் (எ)
தனிமை காதலன்

பாதி கனவில்..!



பாதி கனவில்,
பயத்தின் 
அதிர்ச்சியில் தான்
விழித்திருக்கிறேன் 
இது வரை;
காதலின் வலியில்
இன்று தான்
விழிக்கின்றேன்
முதல் முறை..!
.................................
ஜித்தன் (எ)
தனிமை காதலன்

தவறுகள்..!



மன்னிக்க முடியாத
தவறுகளென்று
ஏதுமில்லை..
ஆனால்,
மறக்க முடியாத 
தவறுகளென்று
பல உண்டு..
இயன்றவரையில்
இரண்டாமவதில்
இல்லாமல் போவதே
இலட்சியமாகக் கொண்டு
இனிதே பயணிப்போம்..!

ஓநாயும் ஆட்டுக்குட்டிகளும்..!


பெரிய ஓநாய்களின்
சிறிய ஓநாய் வேட்டையில்
அதிகமாய் அடிபடுவது 
ஆட்டுக்குட்டிகளே..
நம்பிக்கையிழந்து
வெறுத்து அடிபடும்
ஆட்டுக்குட்டிகளும்,
நல்லது நடக்குமென
விரும்பி அடிபடும்
ஆட்டுக்குட்டிகளுமே
நீயும் நானும்..!
.................................
ஜித்தன் (எ)
தனிமை காதலன்

Monday, 14 November 2016

மரம்.. மனிதம்..


மரங்கள் வைத்து,
தெருவுக்கே
நல்ல காற்றைக் 
கொடுக்கின்றோம்
நாங்கள்,
தாராள மனதுடன்..


குப்பை
கொட்டுகிறதென்று
சண்டைக்கு
வருகிறீர்கள்
நீங்கள்,
குறுகிய மனதுடன்..

உன் வீட்டு குப்பை
என் வீட்டு குப்பையென
பிரித்துப் பார்ப்போர்,
வீசும் காற்றை பிரித்து
சுவாசிக்க முடியுமா..?

காற்றுக்கு
கணக்கும் இல்லை
காசும் இல்லை
என்பதால் தானே
இந்த அலட்சியம்..?

விரைவில் இந்த
இலவச மரங்கள்
எல்லாம் வெட்டப்பட்டு,
பக்கத்துக் காற்று
நஞ்சாகி,
கார்ப்பரேட் காற்று
குப்பிகளில்
விற்கப்படும் நாள்
வரத்தான் போகிறது..

மிகைப்படுத்தல்
இல்லை இது..
நிலத்திற்கு விலையா
என நகைத்த காலமும்,
தண்ணீருக்கு விலையா
என் நகைத்த காலமும்,
கடந்துபோய்
இன்னும் நீண்ட
காலமாகிவிடவில்லையே..!

மரம் வளர்ப்போம்.. வளர்பவர்களை ஊக்கப்படுத்த முடியவில்லை என்றாலும், அவர்களுக்கு தொல்லை கொடுப்பதை தவிர்ப்போம்..!
...................................
ஜித்தன் (எ)
தனிமை காதலன்

அழகுக்கே அணியவள்..!


உன் வீட்டு
அழகு சாதனப் 
பொருட்களெல்லாம்
வெட்கமுற்று,
அலமாரியினுள்ளே
ஒளிந்துகொண்டு 
அடம்பிடிக்கின்றன; 
உன்னையணிந்து 
கொண்டால் தான் 
வெளியே முகம் 
காட்டமுடியுமென..!
....................................
ஜித்தன் (எ) 
தனிமை காதலன்

Saturday, 12 November 2016

அழகின் சிரிப்பு..!


அழகே,
இன்னும் கொஞ்சம்
அதிகமாகத் தான்
சிரியேன்..
அந்த அறையே
வெளிச்சமாகட்டும்..!
...................................
ஜித்தன் (எ)
தனிமை காதலன்

Friday, 11 November 2016

அசட்டுப் பெண்ணே..!


அட 
அசட்டுப் பெண்ணே.. 
படக் கருவியை 
உன் பக்கம் திருப்பு..
கொள்ளையழகு
அங்கே
கொட்டிக்கிடக்க,
இங்கு
வேறெதையோ
படம் பிடித்துக்
கொண்டிருக்கிறாயே..!

.................................
ஜித்தன் (எ)
தனிமை காதலன்

வானத்திலே திருமணம்..!


பூமிக்கும் மழைக்கும் 
திருமணம்; 
அக்கினி சாட்சியாக
இடியின் 
மேள தாளத்துடன்
மின்னலைக் கொண்டு
புகைப்படம்
பிடிக்கிறது வானம்..!

.......................................
ஜித்தன் (எ) 
தனிமை காதலன்

தனித்தனி..!


தனி நீயும் 
தனி நானும் 
சேர்ந்தே 
தேர்ந்தெடுத்த 
தனிமையில்,
இனி நீயும்
இனி நானும்
பிரிந்தே
வாடிடுவோம்
வெறுமையில்..!
.................................
ஜித்தன் (எ)
தனிமை காதலன்

மறந்தேன்..!


அவள் பார்வையில் 
உலகத்தை 
மறந்தேன்,
அளவுப் புன்னகையில் 
உள்ளதையே 
மறந்தேன்..!
...............................................
ஜித்தன் (எ) 

தனிமை காதலன்

Tuesday, 8 November 2016

கலப்பினக் கவிதைகள்..!


உன்
மெல்லின முகத்தில்,
வல்லின விழியும்
இடையின இதழும்
இடைவிடாமல்
பிரசவித்துக் கொண்டே
இருக்கின்றன;
உயர்தர
கலப்பினக் கவிதைகளை..!
..................................................
ஜித்தன் ( எ )
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]

இப்படிக்கு மழை..!


ஏ பெண்ணே, 
இது உனக்கே 
நியாயமா சொல்..
இத்தனை மைல்கள் 
நான் கடந்து வந்தது, 
உன் குடையினை 
முத்தமிடவா..?
இப்படிக்கு,
மழை..!
............................................
ஜித்தன் (எ) 
தனிமை காதலன்<3
[அவள் பெயர் தனிமை]

கவியெழுதும் கவிதை..!


நாங்களெல்லாம் 
யோசித்து யோசித்து 
கவிதைகளை 
கிறுக்கிக்கொண்டிருக்க,
நீ என்ன,
போகிறபோக்கில்
ஒற்றைப் பார்வையிலே
கற்றைக் கவிதைகளை
வீசிவிட்டுப் போகிறாய்..!

............................................
#ஜித்தன் (எ) 
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]

சிரிப்பூக்கள்..!


உன் 
சிரிப்பூக்களில் 
மங்கிப் போயின 
அந்த 
சிவப்பூக்கள்..!
............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]

Monday, 7 November 2016

கன்னங்கள்..!


முத்தங்கள் பதிந்தே
வீங்கிப் பழகிய
என் கன்னங்கள், 
கண்ணீர்த் துளிகள் 
உரசியே 
தேய்ந்து போகிறது
உன் பிரிவால்..! 

............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]

ஞாயிற்றுக்கிழமை..!


இடையறாத
இயந்திர
வாழ்க்கைக்கு 
நடுவே,
வாரமொருமுறை
வந்துபோகும்
சுதந்திரதினம்..!
............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]

உயிர்தீண்டும் உறவுகளே..!


பிரிவைக் கண்டதும்,
போலியானது
வேறு உறவை
நாடிச் சென்றுவிட..
உண்மையோ,
செய்வதறியாமல்
வந்த வழியையே
பார்த்து நிற்க...
நினைவுகள் எல்லாம்
வரிசையாக
கானல் காட்சிகளாய்
தோன்றி மறைய..
அன்பின் உச்ச
உரையாடல்கள்
ஒவ்வொன்றும்
ஏளனம் செய்ய..
தன்னிலை வெறுத்து
இந்நிலை தவிர்க்க,
உயிர்தீண்டும்
உறவுகளே இனி
வேண்டாமென்று
வெதும்பி
ஒதுங்கிக்கொள்கிறது,
புது உறவுகளை
எதிர்கொள்ளும்
ஒவ்வொருமுறையும்..!
............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]

ஏக்கப் பார்வை..!


நீண்ட நேர
உரையாடலுக்குப் பின்
போய் வருகிறேன்
என்று நீ நூறாவது
முறையாக 
சொல்லிப் பிரிந்து
நடந்த மூன்றாவது
அடியில் நின்று
திரும்பிப் பார்த்த
அந்த ஒற்றைப் பார்வை,
இன்னும்
நூற்றாண்டுகள்
இங்கேயே
இருந்திடத் துடிக்கும்
ஏக்கம் சொன்னதடி..!
............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]

காப்புரிமை..!



நானும் அவளும்
உரையாடிய போது
எதேச்சையாக கேட்டாள்,
உன் கவிதைகளுக்கு
காப்புரிமை
வாங்கிவிட்டாயா
என்று..
யாரும்
திருடமுடியா
கவிதை நீயிருக்க,
இந்த வார்த்தை
குவியல்களுக்கு
எதற்கு காப்புரிமை ?
உன் ஒற்றை
பார்வைக்கு
நூற்றைத் தொடுமடி
என் கவிதை
எண்ணிக்கை என்றேன்..
ஆகாகாகவென
சொல்லிச் சிரித்தாள்
வெட்கம் கலந்து..
ம்ம்ம்...
அந்த ஒற்றை
சிரிப்பில்
சிந்திய கவிதைகளில்
வார்த்தைகளால்
மொழிபெயர்க்க முடித்த
நூறாவது கவிதை
இது தான்..!
............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]

இதழ் மலர்கள்..!


ம்ம்ம்..
புரிந்துவிட்டது,
உன் கையிலிருக்கும்
பூக்களில் ஒன்று கூட
ஏன் இன்னும் 
மலரவில்லை என்று..
என்னைப்போல்
அவைகளும்
காத்திருக்கின்றன
உன்னிதழில் மலரும்
புன்னகைக்காக..!
............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]

தேநீரும் என்னுயிரும்..!


இதழால் 
தேநீரையும்,
விழியால் 
என்னுயிரையும்
ஓரு சேர 
உறிகிறாயடி..!

............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]

தேனீ..!


நான் கோபித்துக் 
கொண்டேன் போ..
இனி என்னோடு 
பேசாதே..
அந்த தேனீக்கு 
எப்படி தெரிந்தது
அங்கு தேன்
கிடைக்குமென்று..?

............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]

காதலா காமமா..!


இதழ் முத்தமா 
இல்லை 
மொத்தமுமா 
என்ற புள்ளியில் 
உள்ளது,
இது காதலில்
சேர்ந்த காமமா
அல்லது
காமத்தில்
பிறந்த காதலா 

என்று..
காதலிலும்
காமம்
கலக்கலாம்..
காமத்திலும்
காதல்
பிறக்கலாம்..
ஆனால்,
ஒருவர் காதலிலும்
இன்னொருவர்
காமத்திலும்
கலந்திருப்பது,

உறவுக்கு
ஒவ்வாமையே..!

............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]

எதிர்பார்ப்பில் இன்பம்..!


ம்ம்ம்..
இப்போது உறங்கினால் 
எப்படியும் நீதான் 
வரப்போகிறாய் கனவில்..
இன்னும் கொஞ்சம் நேரம் 
போகட்டும்..
அட..
இது சலிப்பால்
வந்த வார்த்தைகளல்ல..
நீயே சொல்லேன்,
குழந்தைகளுக்கு
தீபாவளி வரப்போகிறதென்ற
ஒரு வார இரவுகள் பிடிக்குமா ?
அல்லது தீபாவளியன்றைய
ஒரு இரவு பிடிக்குமா ?
இன்பம்,
வரப்போகிறதென்ற
எதிர்பார்ப்பில்
இருப்பது தானே
அந்த இன்பத்தைவிட
மிகுந்த சுகம் தரும் ?
அதனால் தான்
உறக்கத்தை
தள்ளிப் போட்டுவிட்டு
எதிர்பார்ப்பில்
இன்பம் காண்கிறேன்..!

............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]