Tuesday, 29 November 2016
Saturday, 26 November 2016
முதல் அங்கீகாரம்..!
முதல் அங்கீகாரம்.. அளவற்ற மகிழ்ச்சி..!
"நிலாமுற்றம் குழுமம்" நடத்திய படத்திற்கேற்ற குறும்பா போட்டியில் கிடைத்த அங்கீகாரம். தேர்வு குழுவினருக்கும், சக நண்பர்களுக்கும் நட்புமிக்க நன்றிகள்..!
குறும்பா, படம் + சான்றிதழை, உங்களிடம் இங்கே பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.
..........................................................
..........................................................
இரவும் பகலும்
சங்கமித்திட,
விழிகள் சந்திக்கவே
சங்கடப்பட,
இதழ்கள் மௌனிக்கவே
விருப்பப்பட,
இதயங்கள் இணைந்திருக்கவே
ஏக்கப்பட,
நிமிடங்கள் நகர்ந்திடவே
சிரமப்பட,
நினைவெல்லாம் மறந்து
உணர்வெல்லாம் துறந்திட,
தொழும் வெவ்வேறு
தெய்வங்களே காரணம்
நாமின்று பிரிந்திட..!
Thursday, 17 November 2016
Tuesday, 15 November 2016
Monday, 14 November 2016
மரம்.. மனிதம்..
மரங்கள் வைத்து,
தெருவுக்கே
நல்ல காற்றைக்
கொடுக்கின்றோம்
நாங்கள்,
தாராள மனதுடன்..
தெருவுக்கே
நல்ல காற்றைக்
கொடுக்கின்றோம்
நாங்கள்,
தாராள மனதுடன்..
குப்பை
கொட்டுகிறதென்று
சண்டைக்கு
வருகிறீர்கள்
நீங்கள்,
குறுகிய மனதுடன்..
கொட்டுகிறதென்று
சண்டைக்கு
வருகிறீர்கள்
நீங்கள்,
குறுகிய மனதுடன்..
உன் வீட்டு குப்பை
என் வீட்டு குப்பையென
பிரித்துப் பார்ப்போர்,
வீசும் காற்றை பிரித்து
சுவாசிக்க முடியுமா..?
என் வீட்டு குப்பையென
பிரித்துப் பார்ப்போர்,
வீசும் காற்றை பிரித்து
சுவாசிக்க முடியுமா..?
காற்றுக்கு
கணக்கும் இல்லை
காசும் இல்லை
என்பதால் தானே
இந்த அலட்சியம்..?
காசும் இல்லை
என்பதால் தானே
இந்த அலட்சியம்..?
விரைவில் இந்த
இலவச மரங்கள்
எல்லாம் வெட்டப்பட்டு,
பக்கத்துக் காற்று
நஞ்சாகி,
கார்ப்பரேட் காற்று
குப்பிகளில்
விற்கப்படும் நாள்
வரத்தான் போகிறது..
இலவச மரங்கள்
எல்லாம் வெட்டப்பட்டு,
பக்கத்துக் காற்று
நஞ்சாகி,
கார்ப்பரேட் காற்று
குப்பிகளில்
விற்கப்படும் நாள்
வரத்தான் போகிறது..
மிகைப்படுத்தல்
இல்லை இது..
நிலத்திற்கு விலையா
என நகைத்த காலமும்,
தண்ணீருக்கு விலையா
என் நகைத்த காலமும்,
கடந்துபோய்
இன்னும் நீண்ட
காலமாகிவிடவில்லையே..!
இல்லை இது..
நிலத்திற்கு விலையா
என நகைத்த காலமும்,
தண்ணீருக்கு விலையா
என் நகைத்த காலமும்,
கடந்துபோய்
இன்னும் நீண்ட
காலமாகிவிடவில்லையே..!
மரம் வளர்ப்போம்.. வளர்பவர்களை ஊக்கப்படுத்த முடியவில்லை என்றாலும், அவர்களுக்கு தொல்லை கொடுப்பதை தவிர்ப்போம்..!
...................................
ஜித்தன் (எ)
தனிமை காதலன்
ஜித்தன் (எ)
தனிமை காதலன்
Saturday, 12 November 2016
Friday, 11 November 2016
Tuesday, 8 November 2016
Monday, 7 November 2016
உயிர்தீண்டும் உறவுகளே..!
பிரிவைக் கண்டதும்,
போலியானது
வேறு உறவை
நாடிச் சென்றுவிட..
போலியானது
வேறு உறவை
நாடிச் சென்றுவிட..
உண்மையோ,
செய்வதறியாமல்
வந்த வழியையே
பார்த்து நிற்க...
நினைவுகள் எல்லாம்
வரிசையாக
கானல் காட்சிகளாய்
தோன்றி மறைய..
அன்பின் உச்ச
உரையாடல்கள்
ஒவ்வொன்றும்
ஏளனம் செய்ய..
தன்னிலை வெறுத்து
இந்நிலை தவிர்க்க,
உயிர்தீண்டும்
உறவுகளே இனி
வேண்டாமென்று
வெதும்பி
ஒதுங்கிக்கொள்கிறது,
புது உறவுகளை
எதிர்கொள்ளும்
ஒவ்வொருமுறையும்..!
செய்வதறியாமல்
வந்த வழியையே
பார்த்து நிற்க...
நினைவுகள் எல்லாம்
வரிசையாக
கானல் காட்சிகளாய்
தோன்றி மறைய..
அன்பின் உச்ச
உரையாடல்கள்
ஒவ்வொன்றும்
ஏளனம் செய்ய..
தன்னிலை வெறுத்து
இந்நிலை தவிர்க்க,
உயிர்தீண்டும்
உறவுகளே இனி
வேண்டாமென்று
வெதும்பி
ஒதுங்கிக்கொள்கிறது,
புது உறவுகளை
எதிர்கொள்ளும்
ஒவ்வொருமுறையும்..!
............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]
ஏக்கப் பார்வை..!
நீண்ட நேர
உரையாடலுக்குப் பின்
போய் வருகிறேன்
என்று நீ நூறாவது
முறையாக
சொல்லிப் பிரிந்து
நடந்த மூன்றாவது
அடியில் நின்று
திரும்பிப் பார்த்த
அந்த ஒற்றைப் பார்வை,
உரையாடலுக்குப் பின்
போய் வருகிறேன்
என்று நீ நூறாவது
முறையாக
சொல்லிப் பிரிந்து
நடந்த மூன்றாவது
அடியில் நின்று
திரும்பிப் பார்த்த
அந்த ஒற்றைப் பார்வை,
இன்னும்
நூற்றாண்டுகள்
இங்கேயே
இருந்திடத் துடிக்கும்
ஏக்கம் சொன்னதடி..!
நூற்றாண்டுகள்
இங்கேயே
இருந்திடத் துடிக்கும்
ஏக்கம் சொன்னதடி..!
............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]
காப்புரிமை..!
நானும் அவளும்
உரையாடிய போது
எதேச்சையாக கேட்டாள்,
உன் கவிதைகளுக்கு
காப்புரிமை
வாங்கிவிட்டாயா
என்று..
யாரும்
திருடமுடியா
கவிதை நீயிருக்க,
இந்த வார்த்தை
குவியல்களுக்கு
எதற்கு காப்புரிமை ?
உன் ஒற்றை
பார்வைக்கு
நூற்றைத் தொடுமடி
என் கவிதை
எண்ணிக்கை என்றேன்..
ஆகாகாகவென
சொல்லிச் சிரித்தாள்
வெட்கம் கலந்து..
ம்ம்ம்...
அந்த ஒற்றை
சிரிப்பில்
சிந்திய கவிதைகளில்
வார்த்தைகளால்
மொழிபெயர்க்க முடித்த
நூறாவது கவிதை
இது தான்..!
............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]
உரையாடிய போது
எதேச்சையாக கேட்டாள்,
உன் கவிதைகளுக்கு
காப்புரிமை
வாங்கிவிட்டாயா
என்று..
யாரும்
திருடமுடியா
கவிதை நீயிருக்க,
இந்த வார்த்தை
குவியல்களுக்கு
எதற்கு காப்புரிமை ?
உன் ஒற்றை
பார்வைக்கு
நூற்றைத் தொடுமடி
என் கவிதை
எண்ணிக்கை என்றேன்..
ஆகாகாகவென
சொல்லிச் சிரித்தாள்
வெட்கம் கலந்து..
ம்ம்ம்...
அந்த ஒற்றை
சிரிப்பில்
சிந்திய கவிதைகளில்
வார்த்தைகளால்
மொழிபெயர்க்க முடித்த
நூறாவது கவிதை
இது தான்..!
............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]
காதலா காமமா..!
இதழ் முத்தமா
இல்லை
மொத்தமுமா
என்ற புள்ளியில்
உள்ளது,
இது காதலில்
சேர்ந்த காமமா
அல்லது
காமத்தில்
பிறந்த காதலா
என்று..
காதலிலும்
காமம்
கலக்கலாம்..
காமத்திலும்
காதல்
பிறக்கலாம்..
ஆனால்,
ஒருவர் காதலிலும்
இன்னொருவர்
காமத்திலும்
கலந்திருப்பது,
உறவுக்கு
ஒவ்வாமையே..!
............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]
எதிர்பார்ப்பில் இன்பம்..!
ம்ம்ம்..
இப்போது உறங்கினால்
எப்படியும் நீதான்
வரப்போகிறாய் கனவில்..
இன்னும் கொஞ்சம் நேரம்
போகட்டும்..
அட..
இது சலிப்பால்
வந்த வார்த்தைகளல்ல..
நீயே சொல்லேன்,
குழந்தைகளுக்கு
தீபாவளி வரப்போகிறதென்ற
ஒரு வார இரவுகள் பிடிக்குமா ?
அல்லது தீபாவளியன்றைய
ஒரு இரவு பிடிக்குமா ?
இன்பம்,
வரப்போகிறதென்ற
எதிர்பார்ப்பில்
இருப்பது தானே
அந்த இன்பத்தைவிட
மிகுந்த சுகம் தரும் ?
அதனால் தான்
உறக்கத்தை
தள்ளிப் போட்டுவிட்டு
எதிர்பார்ப்பில்
இன்பம் காண்கிறேன்..!
............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]
Subscribe to:
Posts (Atom)