ம்ம்ம்..
இப்போது உறங்கினால்
எப்படியும் நீதான்
வரப்போகிறாய் கனவில்..
இன்னும் கொஞ்சம் நேரம்
போகட்டும்..
அட..
இது சலிப்பால்
வந்த வார்த்தைகளல்ல..
நீயே சொல்லேன்,
குழந்தைகளுக்கு
தீபாவளி வரப்போகிறதென்ற
ஒரு வார இரவுகள் பிடிக்குமா ?
அல்லது தீபாவளியன்றைய
ஒரு இரவு பிடிக்குமா ?
இன்பம்,
வரப்போகிறதென்ற
எதிர்பார்ப்பில்
இருப்பது தானே
அந்த இன்பத்தைவிட
மிகுந்த சுகம் தரும் ?
அதனால் தான்
உறக்கத்தை
தள்ளிப் போட்டுவிட்டு
எதிர்பார்ப்பில்
இன்பம் காண்கிறேன்..!
............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]
No comments:
Post a Comment