Saturday, 26 November 2016

கவிதை அறுவடை..!



வினை விதைத்தவன்
வினை அறுப்பான்;
திணை விதைத்தவன்
திணை அறுப்பான்..

நான் மட்டும்,
காதலை விதைத்துவிட்டு
கவிதைகளை அறுவடை
செய்துகொண்டிருக்கிறேன்..

நினைவுகளை உரமாக்கி
பாய்ச்சிய கண்ணீருக்கு,
என் மன வயலில்
அமோக விளைச்சல்..!

No comments:

Post a Comment