உன் நிழற்படத்தை
கையில்
வைத்துக்கொண்டு
கவிதை எழுதலாம்
என்று யோசித்திருந்தேன்..
அட..
வார்த்தைகளா
முக்கியம் ?
கவிதை என்று
எழுதிவிட்டு கீழே
உன் படத்தையே
ஒட்டிவிட்டேன்..
நீயே சொல்,
இதை விடவா
என் வார்த்தைகள்
அழகு சேர்த்துவிடப்
போகின்றன..?
............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]
No comments:
Post a Comment