Monday, 7 November 2016

காப்புரிமை..!



நானும் அவளும்
உரையாடிய போது
எதேச்சையாக கேட்டாள்,
உன் கவிதைகளுக்கு
காப்புரிமை
வாங்கிவிட்டாயா
என்று..
யாரும்
திருடமுடியா
கவிதை நீயிருக்க,
இந்த வார்த்தை
குவியல்களுக்கு
எதற்கு காப்புரிமை ?
உன் ஒற்றை
பார்வைக்கு
நூற்றைத் தொடுமடி
என் கவிதை
எண்ணிக்கை என்றேன்..
ஆகாகாகவென
சொல்லிச் சிரித்தாள்
வெட்கம் கலந்து..
ம்ம்ம்...
அந்த ஒற்றை
சிரிப்பில்
சிந்திய கவிதைகளில்
வார்த்தைகளால்
மொழிபெயர்க்க முடித்த
நூறாவது கவிதை
இது தான்..!
............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]

No comments:

Post a Comment